• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

பீன்ஸ் வதக்கல்


தேவையானப்பொருட்கள்:

பீன்ஸ் - 10 முதல் 15 வரை
தக்காளி பொடியாக நறுக்கியது - 2 டேபிள்ஸ்பூன்
பூண்டு பற்கள் - 2 (சிறிய அளவு)
கொரகொரப்பாக பொடித்த மிளகாய் (Chilli flakes) - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 1 டீஸ்பூன்
உப்பு - 1/4 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

பீன்ஸைக் கழுவி, இரு முனைகளையும் கிள்ளி விட்டு, 2 அங்குல நீளத்திற்கு வெட்டிக் கொள்ளவும்.

வெட்டிய பீன்ஸ் துண்டுகளை கொதிக்கும் நீரில் போட்டு, அத்துடன் ஒரு சிட்டிகை உப்பையும் சேர்த்து 2 அல்லது 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு, எடுத்து குளிர்ந்த நீரில் அலசி வைத்துக் கொள்ளவும்.  இப்படி செய்வதால் காயின் நிறம் மற்றும் சுவை மாறாது.  அதே சமயம் காயும் பாதி வெந்து விடும்.
 
பூண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு அதில் நறுக்கிய பூண்டைப் போட்டு ஓரிரு வினாடிகள் வதக்கவும். பின்னர் அதில் 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் தண்ணீரை விட்டு வதக்கவும். தண்ணீர் சுண்டியவுடன் பீன்ஸைப் போட்டு ஓரிரு நிமிடங்கள் வதக்கவும்.  இப்பொழுது தக்காளியைச் சேர்த்து,  மசியும் வரை வதக்கவும்.  கடைசியில் பொடித்த மிளகாய், உப்பு சேர்த்து மீண்டும் சில வினாடிகள் வதக்கி இறக்கி வைக்கவும்.

சாதம், சப்பாத்தியுடன் பரிமாறலாம். பீன்ஸ் சின்னதாக இருந்தால், முனையை மட்டும் கிள்ளி விட்டு முழுதாகவே உபயோகிக்கலாம்.

கவனிக்க: தக்காளிப் பழத்திற்குப் பதில், தக்காளி கெட்சப் அல்லது சாஸ் உபயோகித்தும் செய்யலாம்.


1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சிம்பிளா, அருமையா சொல்லி இருக்கீங்க ! நன்றி !

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...