• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

உருளைக்கிழங்கு, கத்திரிக்காய் புளிக்கறி


தேவையானப்பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2
கத்திரிக்காய் - 2
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
புளி - ஒரு நெல்லிக்காயளவு
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - இரண்டு சிட்டிகை
கறிவேப்பிலை - சிறிது
வெங்காயம் பொடியாக நறுக்கியது - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை

செய்முறை:

புளியை 1/4 கப் தண்ணீரில் ஊற வைத்து கெட்டியாக புளித்தண்ணீரை எடுத்து வைக்கவும்.  புளித்தண்ணீர் 1 முதல் 2 டேபிள்ஸ்பூன் வரை தேவை.

உருளைக்கிழங்கை நன்றாகக் கழுவி விட்டு, தோலை சீவி, ஒரு அங்குலத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். கத்திரிக்காயையும் அதே அளவிற்கு வெட்டிக் கொள்ளவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் உருளை, கத்திரி துண்டுகளைப் போடவும். அத்துடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் உப்பு, புளித்தண்ணீர் ஆகியவற்றைச் சேர்த்து பிசறி 10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊற விடவும்.

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி எண்ணை விடவும். எண்ணை காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு, பெருங்காயம் சேர்த்து சிவக்க வறுக்கவும். பின்னர் வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும் கடைசியில் ஊற வைத்துள்ள உருளை, கத்திரிக்காயைச் சேர்த்துக் கிளறி விடவும். அரைக் கப் தண்ணீரை சேர்த்து மீண்ரும் நன்றாகக் கிளறி விடவும்.  மூடி போட்டு, அடுப்பை சிறு தீயில் வைத்து வேக விடவும்.  அவ்வப்பொழுது கிளறி விட்டு,   உருளைக்கிழங்கு வேகும் வரை அடுப்பில் வைத்திருந்து, இறக்கி வைக்கவும்.

சாதம், சப்பாத்தி இரண்டிற்குமே தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

பகிர்வுக்கு நன்றி சகோதரி ! வீட்டில் செய்ய சொல்கிறேன். !

கோமதி அரசு சொன்னது…

ந்னறாக இருக்கு போலவே இப்படி செய்தது இல்லை. செய்து பார்த்து விடுகிறேன். நன்றி.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...