• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

பீட்ரூட் இனிப்பு பச்சடி


திருமண விருந்துகளில் "இனிப்பு பச்சடி" கண்டிப்பாக இடம் பெறும்.  இது "தக்காளி", "பீட்ரூட்" அல்லது பழத்துண்டுகளை வைத்து செய்யப்படும்.  பீட்ரூட் இனிப்பு பச்சடிக்கான குறிப்பு:

தேவையானப்பொருட்கள்:

பீட்ரூட் - 1
சர்க்கரை - 4 அல்லது 5 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது
காய்ந்த திராட்சை - சிறிது
ஏலக்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
சோளமாவு - 1 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

பீட்ரூட்டை கழுவி, தோலை சீவி விட்டு துருவிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் நெய்யை விட்டு அதில் முந்திரி பருப்பு, திராட்சை ஆகியவற்றை இலேசாக வறுத்து எடுத்து, தனியாக வைத்துக் கொள்ளவும்.

அதே வாணலியில் பீட்ரூட் துருவலைப் போட்டு 5 முதல் 6 நிமிடங்கள் வரை வதக்கி எடுத்து ஆற விடவும்.  ஆறிய பின் விழுதாக அரைத்தெடுத்துக் கொள்ளவும்.

அடி கனமான பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீரை விட்டு அத்துடன் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். சர்க்கரை நீர் நன்றாகக் கொதிக்கும் பொழுது அதில் பீட்ரூட் விழுதைச் சேர்த்து கிளறி விடவும். மீண்டும் கொதிக்க ஆரம்பிக்கும் பொழுது, அதில் சோளமாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.  ஒரு கொதி வர ஆரம்பித்ததும் அதில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை மற்றும் ஏலப்பொடி சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

தக்காளி இனிப்பு பச்சடி குறிப்பிற்கு இங்கே சொடுக்கவும்.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

இவ்வளவு எளிதா இருக்கே... நன்றி சகோதரி...

கோவி சொன்னது…

படிக்க படிக்க எச்சில் ஊருகிறது..

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...