• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

பொட்டுக்கடலை வடை


தேவையானப்பொருட்கள்:

பொட்டுக்கடலை - 1/2 கப்
கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்
கசகசா - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது
நறுக்கிய வெங்காயம் - 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் 
நறுக்கிய பச்சை மிளகாய் - 1 டீஸ்பூன்
நறுக்கிய கொத்துமல்லி இலை - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

பொட்டுக்கடலை, கசகசா, சோம்பு, முந்திரிப்பருப்பு ஆகியவற்றை ஒன்றாக மிக்ஸியில் போட்டு, சற்று கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும். பொடித்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் கடலை பாவு, பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், கொத்துமல்லி, தேங்காய்த்துருவல், உப்பு ஆகியவற்றை போட்டு கலந்துக் கொள்ளவும். அதில் சிறிது சிறிதாகத் தண்ணீரைத் தெளித்து, கெட்டியாகப் பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும், எலுமிச்சம் பழ அளவிற்கு மாவை எடுத்து வடையாகத் தட்டிப் போடவும். 3 அல்லது 4 வடைகளாகப் போட்டு, மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

தக்காளி சாஸ் அல்லது கெட்சப் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.

மேற்கண்ட அளவிற்கு  சுமார் 12 வடைகள் கிடைக்கும்.

1 கருத்து:

கோமதி அரசு சொன்னது…

பொட்டுக்கடலை வடை சுவையாக இருக்கிறது.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...