• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

பயத்தம் பருப்பு உக்காரை


தேவையானப்பொருட்கள்:

பயத்தம் பருப்பு - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
ரவா - 1/2 கப்
வெல்லத்தூள் - 2 கப்
நெய் - 1/2 கப்
தேங்காய்த்துருவல் - 1 கப்
முந்திரிப்பருப்பு - 10 முதல் 15 வரை
ஏலக்காய்த்தூள் - 1 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய்யை விட்டு, அதில் பயத்தம் பருப்பைப் போட்டு இலேசாக சிவக்கும் வரை வறுத்துக் கொள்ளவும். வறுத்தப் பருப்பை குக்கரில் போட்டு 2 கப் தண்ணீரைச் சேர்த்து 3 அல்லது 4 விசில் வரும் வரை அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.

வாணலியில் ஒரு டீஸ்பூன் நெய் விட்டு முந்திரிப்பருப்பை வறுத்து எடுத்து தனியாக வைத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 1/2 கப் தண்ணீரை விட்டு, அதில் வெல்லத் தூளைப் போட்டு கொதிக்க விடவும். வெல்லம் நன்றாகக் கரைந்து கொதிக்க ஆரம்பித்தவுடன், அடுப்பிலிருந்து இறக்கி, வடிகட்டி வைக்கவும்.

வாணலியை அடுப்பிலேற்றி அதில் 2 அல்லது 3 டேபிள்ஸ்பூன் நெய் விடவும். அதில் ரவாவைப் போட்டு வாசனை வரும் வரை வறுக்கவும். பின்ன்ர் அதில் அரிசிமாவைப்போட்டு ஓரிரு வினாடிகள் வறுக்கவும். பின் தேங்காய்த்துருவலைப் போட்டு 2 அல்லது 3 நிமிடங்கள் வறுக்கவும். அதில் வெந்தப் பருப்பை நன்றாக மசித்து சேர்க்கவும். அத்துடன் வெல்லப்பாகையும் சேர்த்து கிளறி விடவும். மிதமானத் தீயில் உக்காரை கெட்டியாகும் வரை வைத்திருந்து கிளறிக் கொண்டே இருக்கவும். பின் மீதமுள்ள நெய்யை விட்டுக் கிளறவும். வாணலியில் ஒட்டாமல் உருண்டு வரும் பொழுது வறுத்து வைத்துள்ள் முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து நன்றாகக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி நெய் தடவிய கிண்ணத்தில் கொட்டி வைக்கவும்.

2 கருத்துகள்:

saranyadhanushkodi சொன்னது…

nengal kodutha anaith vagaikalum padikum pothey naakil suvai kuduthu. enaku vaalai poo poriyal and koottu seivathu eppadi endru sollungalen?

கமலா சொன்னது…

வாழைப்பூ பொரியல் கீழ்கண்ட லின்ங்கில் உள்ளது. கூட்டு செய்யும் முறைகள் பற்றி அறிய, என் தளத்தின் இடது புறத்தில் உள்ள "கூட்டு" என்ற பட்டனை அழுத்தினால் கிடைக்கும்

http://adupankarai.kamalascorner.com/2008/06/blog-post_02.html

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...