
முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், குறிப்பாக தஞ்சை மாவட்ட கிராமங்களில் எல்லோர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.
இதை தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.
குறைந்தது மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.
கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.
இந்த கீரையில் தோசை செய்வதுதான் வழக்கம். துவையலும் செய்யலாம். பச்சைக்கீரை சிறிது கசக்கும். ஆனால் சமைத்தப்பின் அவ்வளவாகத் தெரியாது.
முடக்கத்தான் கீரை தோசை
2 கப் புழுங்கல் அரிசியை ஊறவைத்து, அத்துடன் இரண்டு கைப்பிடி கீரையையும், சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து, தோசைப் போல் சுட்டு சாப்பிடலாம். இது சற்று மருந்து வாசனையுடன் இருக்கும்.
இரண்டு கைப்பிடி கீரையை, மிக்ஸியில் போட்டு மை போல் அரைத்தெடுத்து, சாதரணத் தோசைமாவுடன் (ஒரு பெரிய கிண்ணம் அளவு) கலந்து, தோசை சுட்டால், கசப்பு சிறிதும் தெரியாது.
நல்ல காரமான சட்னியுடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.
3 மறுமொழி:
Hi kamala,
I enjoyed visiting ur blog. I am intrigued by the "mudakkanthan kirai". I live in Southern california. Can u help me with the english/botanical name for it and also where I can buy this? I wud like to try growing it in my garden. I greatly appreciate ur help with this. thanx.
Also I will keep u posted on the Vangi baath. I am going to try it today with my home grown eggplant. It is very inspiring with good pictures. Thanx for the recipe.
Hi,
Thank you for visiting my site.
Mudakathan Keerai in Tamil is known as Indravalli in Sanskrit.
Its botanical name is Cardiospermum halicababum and belongs to the soapberry family.
If you find it difficult to read/write in Tamil, you can check my recipes at www.kamalascorner.com in English.
Good information.
Post a Comment