• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

கறிவேப்பிலைத் துவையல்


தேவையானப்பொருட்கள்:

கறிவேப்பிலை - 1 கப்
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
புளி - ஒரு சிறிய நெல்லிக்காயளவு
பெருங்காயம் - ஒரு பட்டாணி அளவு
உப்பு - 3/4 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, பெருங்காயம், பருப்புகள், மிளகாய் ஆகியவற்றைத் தனித்தனியாகப் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும். கடைசியில், அடுப்பை தணித்துக் கொண்டு, கறிவேப்பிலையைப் போட்டு வதக்கவும். பின்னர் அதில் புளியையும், தேங்காய்த்துருவலையும் சேர்த்து வதக்கி, சற்று ஆறியவுடன் அத்துடன் வறுத்த பருப்பு, மிளகாய், பெருங்காயம், உப்பு எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாக அரைத்தெடுக்கவும்.

இதில் மேலும் சற்று நீரைச் சேர்த்து, தளர சட்னியாகவும் செய்யலாம். இட்லி, தோசை போன்றவற்றுடன் பரிமாற நன்றாயிருக்கும்.

கவனிக்க: தேங்காய் சேர்த்து அரைத்தால் சுவை சற்று கூடுதலாக இருக்கும். தேங்காயைத் தவிர்த்தும் இந்த துவையலைச் செய்யலாம். தேங்காய் உபயோகிக்காவிட்டால், பருப்பு வகைகளைச் சற்று கூடுதலாக போடவும்.

தேங்காய், பருப்பு எதுவுமில்லாமல், வெறும் உப்பு, புளி, மிளகாயுடன் கறிவேப்பிலையைச் சேர்த்து அரைத்தும் செய்யலாம். இந்த வகை சற்று கசப்பு தன்மை உடையதாக இருக்கும். ஆனால் உடலுக்கு மிகவும் நல்லது.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...