• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

வாழைக்காய் பொடிமாஸ்


தேவையானப்பொருட்கள்:

வாழைக்காய் - 1
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எலுமிச்சை சாறு - 1/2 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்)

செய்முறை:

வாழைக்காயை தோலுடன் இரண்டாக வெட்டி, கொதிக்கும் நீரில் போட்டு 5 முதல் 7 நிமிடங்கள் வரை வேக வைத்து எடுக்கவும். சற்று ஆறியதும் தோலை உரித்து விட்டு, துருவிக் கொள்ளவும். அல்லது கைகளால் பொடியாக உதிர்த்துக் கொள்ளவும்.

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பை சேர்த்து சிவக்க வறுக்கவும். பின்னர் அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். அத்துடன் சோம்பை ஒன்றிரண்டாகப் பொடித்து சேர்த்து வதக்கவும். துருவிய வாழைக்காய், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்த்துக் கிளறி விட்டு, மூடி போட்டு, குறைந்த தீயில் 4முதல் 5 நிமிடங்கள் வரை அடுப்பில் வைத்திருக்கவும். கடைசியில் தேங்காய்த்துருவலை போட்டு நன்றாகக் கிளறி விட்டு, இறக்கி வைக்கும் முன் எலுமிச்சம் சாற்றையும் விட்டு மீண்டும் ஒரு முறை கிளறி இறக்கி வைக்கவும்.

கவனிக்க: சோம்பு வாசனை பிடிக்காதவர்கள், அதை தவிர்த்து விட்டு, பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை சேர்த்துக் கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...