• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

மொச்சைக்கொட்டை வதக்கல்


தேவையானப்பொருட்கள்:

பச்சை மொச்சைக்கொட்டை - 1 கப்
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
தனியாத்தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
கரம் மசாலாத்தூள் - ஒரு சிட்டிகை
வெங்காயம் - 1
தக்காளி - 1
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் உளுத்தம் பருப்பை போட்டு சிவக்க வறுக்கவும். பின்னர் அதில் வெங்காயம், கறிவேப்பிலைச் சேர்த்து சற்று வதக்கவும். பின் தக்காளியைச் சேர்த்து வதக்கி அத்துடன் பச்சை மொச்சைக்கொட்டை, மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்துக் கிளறி விடவும். அடுப்பை சிறு தீயில் வைத்து, மூடி போட்டு வேக விடவும். அவ்வப்பொழுது கிளறி விட்டு, மொச்சைக்கொட்டை வெந்ததும் அதில் மிளகுத்தூள் மற்றும் கரம் மசாலாத்தூளைத் தூவிக் கிளறி இறக்கி வைக்கவும்.

இதை சாதம் மற்றும் சப்பாத்திக்கு தொட்டுக் கொள்ளலாம்.  

குறிப்பு:  இதை காய்ந்த மொச்சைக்கொட்டையிலும் செய்யலாம்.  காய்ந்த மொச்சைக்கொட்டையானால், ஊறவைத்து, பின்னர் ஓரிரு விசில் வரும் வரை குக்கரில் வேக வைத்து உபயோகிக்கவும்.

1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வழக்கமாக எதாவது குழம்பில் தான் செய்வார்கள்... இது புதுசு... நன்றி...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...