• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

பயத்தம் பருப்பு தயிர் போண்டா


தேவையானப்பொருட்கள்:

பயத்தம் பருப்பு - 1 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
பச்சை மிளகாய் - 4 அல்லது 5
இஞ்சி - ஒரு சிறு துண்டு
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
தயிர் - 3 கப் அல்லது தேவைக்கேற்றவாறு
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

பயத்தம் பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டையும் 2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் நன்றாக கழுவி விட்டு, தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு, அத்துடன் பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், உப்பு ஆகியவற்றைச் சேர்த்து, நன்றாக அரைத்தெடுக்கவும்.

ஒரு அகன்ற பாத்திரத்தில் 5 அல்லது 6 கப் தண்ணீரை விட்டு, கொதிக்க வைத்து, இறக்கி வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடாக்கவும்.  எண்ணை காய்ந்ததும், கையை தண்ணீரில் நனைத்துக் கொண்டு, எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து எண்ணையில் போடவும்.  எண்ணை கொள்ளுமளவிற்கு 4 அல்லது 5 போண்டாவைப் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுத்து, கொதிக்க வைத்துள்ள வென்னீரில் போடவும். போண்டா வென்னீரில் ஊறி சற்று மிருதுவானவுடன், ஒரு கரண்டியால் எடுத்து, இலேசாக பிழிந்து விட்டு, ஒரு தட்டில் பரவலாக அடுக்கி வைக்கவும். தயிரை நன்றாகக் கடைந்து விட்டு, சிறிது உப்பைச் சேர்த்துக் கலக்கி, போண்டாவின் மேல் ஊற்றவும்.  அதன் மேல்  மிளகாய்த்தூளைத் தூவி பரிமாறவும்.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆகா... இப்பவே சாப்பிடனும் போலிருக்கே...ஹிஹி...

செய்முறை குறிப்பிற்கு நன்றி...

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

நல்லது

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...