• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

கத்திரிக்காய் தொக்கு

தேவையானப்பொருட்கள்:

கத்திரிக்காய் (நடுத்தர அளவு) - 5
புளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்
தனியாத்தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
எண்ணை - 2 முதல் 3 டேபிள்ஸ்பூன் வரை
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

வறுத்தரைக்க:

எள் - 1 டேபிள்ஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

வெறும் வாணலியில், எள் மற்றும் வெந்தயத்தை சிவக்க வறுத்து, ஆற வைத்து பொடித்துக் கொள்ளவும். புளியை ஊற வைத்து, தேவையான தண்ணீரைச் சேர்த்து, ஒரு கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும். கத்திரிக்காயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் பெருங்காயத்தூள் மற்றும் கறிவேப்பிலையைச் சேர்க்கவும் பின்னர் அதில் கத்திரிக்காயைச் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் நன்றாக வதக்கவும். மூடி போட்டு மிதமான தீயில் வேக விடவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை. வேண்டுமானால் சிறிது நீரைத் தெளித்து வேக விடவும். காய் நன்றாக வெந்தவுடன், அத்துடன் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைப் போட்டுக் கிளறி விடவும். பின் புளித்தண்ணீரைச் சேர்த்துக் கிளறி விட்டு, கொதிக்க விடவும். தொக்கு கொதித்து சற்று கெட்டியானவுடன், பொடித்து வைத்துள்ள எள் மற்றும் வெந்தயப் பொடியைத் தூவிக் கிளறி விட்டு இறக்கி வைக்கவும். சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம். சப்பாத்தியுடனும் பரிமாறலாம்.  

கவனிக்க: கத்திரிக்காயை சுட்டும், இநதத் தொக்கை செய்யலாம். கத்திரிக்காயை அடுப்பில் சுட்டு, தோலை உரித்து விட்டு கொரகொரப்பக அரைத்து, பின்னர் மெற்கண்டபடி செய்யலாம். அல்லது கத்திரிக்காயை வதக்கி கொரகொரப்பாக அரைத்தும் செய்யலாம். இதில் மேலும் சிறிது எண்ணையைச் சேர்த்து செய்தால் ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்.

2 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

புதிய செய்முறை...

நன்றி சகோதரி...

R.R.L. சொன்னது…

Very good.super

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...