• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

மெதுவடை


தேவையானப் பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1 கப்
அரிசி - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன்
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பச்சைமிளகாய் - 2
எண்ணை பொரிப்பதற்கு

செய்முறை:

உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும். பின் நன்றாக் கழுவி, தண்ணீரை வடிய விடவும். அதில் உப்பு, இஞ்சி சேர்த்து, கிரைண்டரில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். அவ்வப்பொழுது சிறிது தண்ணீரைத் தெளித்து நன்றாகக் கிளறி விட்டு அரைக்கவும். மாவு கெட்டியாகவும், அதே சமயம், கையில் எடுத்தால் லேசாகவும் இருக்க வேண்டும். சிறிது மாவை எடுத்து, தண்ணீரில் போட்டால், மாவு தண்ணீரில் மிதக்க வேண்டும். அதுதான் சரியான பதம்.

பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கி மாவில் சேர்த்து பிசைந்துக் கொள்ளவும்.
எண்ணையை வாணலியில் விட்டு அடுப்பில் வைக்கவும். எண்ணை காய்ந்ததும், கைகளை தண்ணீரில் நனைத்துக் கொண்டு, ஒரு எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி, உள்ளங்கையில் வைத்து, லேசாக அழுத்தவும். பின் அதன் நடுவில், ஒரு துளை செய்து எண்ணையில் போட்டு பொன்னிறமாக்ப் பொரித்தெடுக்கவும்.


குறிப்பு:

உளுத்தம் பருப்பை நீண்ட நேரம் ஊறவைத்தால், வடை நிறைய எண்ணையை இழுத்துக் கொள்ளும். வடை மாவில், ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி சேர்க்கலாம். பச்சை கொத்துமல்லி தழையையும் சேர்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...