• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

கதம்ப கூட்டு



தேவையானப் பொருட்கள்:

வாழைக்காய் - பாதி
கத்திரிக்காய் - 1
அவரைக்காய் - 5
சேனைக்கிழங்கு - 1 சிறு துண்டு
சர்க்கரைவள்ளி கிழங்கு - 1
உருளைக்கிழங்கு - 1
தேங்காய் துருவல் - 1 கப்
காய்ந்த மிளகாய் - 6
துவரம் பருப்பு - 1 கப்
உளுத்தம் பருப்பு - 2 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 2 டேஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கொத்து
தேங்காய் எண்ணை - 2 டேபிள்ஸ்பூன்
கடுகு - சிறிதளவு
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

துவரம்பருப்பை குழைய வேக வைக்கவும்.

வாணலியில் சிறிது தேங்காய் எண்ணை விட்டு உளுத்தம் பருப்பு, மிளகாயை வறுத்துக் கொள்ளவும். பின்பு தேங்காய் துருவலையும் போட்டு ஒரு நிமிடம் வறுத்து, அத்துடன் சீரகம், மிளகையும் சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

காய்கறிகளை நடுத்தர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்களைப் போட்டு உப்பு, மஞ்சள் தூள் சேர்க்கவும். காய்கறிகள் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு வேக வைக்கவும்.

காய்கள் வெந்ததும் வேக வைத்த துவரம்பருப்பு, அரைத்த விழுது எல்லாவற்றையும் போட்டு, நன்றாக கொதித்தவுடன் தேங்காய் எண்ணெயில் கடுகு, பெருங்காயம், கடலைப்ப்ருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...