• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

ஆரஞ்சுத்தோல் பச்சடி


தேவையானப் பொருட்கள்:

ஆரஞ்சுத்தோல் பொடியாக நறுக்கியது - 1 கப்
புளி - ஒரு சிறு எலுமிச்சம்பழ அளவு
தக்காளி - 2 (நடுத்தர அளவு)
வெல்லம் பொடி செய்தது - 1/2 கப்
மிளகாய்த்தூள் ‍- 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் ‍- 1/4 டீஸ்பூன்
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு ‍- 1/2 டீஸ்பூன்
சீரகம் ‍- 1 டீஸ்பூன்
வெந்தயம் ‍- 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

புளியைத் தண்ணீரில் ஊறவைத்து, கெட்டியாகக் கரைத்து ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும்.

தக்காளியைத் துண்டுகளாக்கி, நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

ஆரஞ்சுத்தோல் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, 1/2 கப் தண்ணீரை விட்டு வேக விடவும். வெந்தவுடன், அதில் புளித்தண்ணீர், தக்காளிச்சாறு, மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள், உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். நன்றாகக் கிளறி, மூடி வைத்து, கொதிக்க விடவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானவுடன், கடுகு, சீரகம், வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை, தாளித்து, அதில் கொதிக்கும் ஆர‌ஞ்சுத்தோல் குழம்பைக் கொட்டி கலக்கவும். வெல்லப் பொடியைச் சேர்த்துக் கிளறி விட்டு, சிறு தீயில் வைக்கவும். வெல்லம் கரைந்து, பச்சடி திக்கானவுடன், இறக்கி வைக்கவும்.

ரசம் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றுடன் தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும்.

குறிப்பு: ஆரஞ்சு புதிதாக இருக்க வேண்டும். "கமலா ஆரஞ்சு" என்று அழைக்கப்படும் பழத்தை, உரித்தப்பின் இருக்கும் தோலில் இதை செய்ய வேண்டும். காரம், உப்பு, வெல்லம் ஆகியவற்றை அவரவர் தேவைக்கேற்றவாறு, கூட்டியோ, குறைத்தோ சேர்க்கலாம்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...