• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

காய்கறி தயிர் பச்சடி


தேவையானப்பொருட்கள்:

வெள்ளரிக்காய் - 1
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
காரட் - 1
கொத்துமல்லி இலை - சிறிது
பச்சைமிளகாய் - 2 (நடுத்தர அளவு)
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது ருசிக்கேற்றவாறு
தயிர் - ஒரு பெரிய கிண்ணம்

செய்முறை:

வெள்ளரியின் தோல் மற்றும் விதைப்பகுதியை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். காரட்டின் தோலை சீவி விட்டு, வெள்ளரித்துண்டின் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும். தக்காளியை இரண்டாக வெட்டி, அதனுள் இருக்கும் விதை மற்றும் சாறு ஆகியவற்றை நீக்கி விட்டு மற்ற காய்களின் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயைக் கீறி விதையை நீக்கி விட்டு பொடியாக நறுக்கவும். கொத்துமல்லியையும், வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தயிரை நன்றாகக் கடைந்து அத்துடன் உப்பு சேர்த்துக் கலக்கவும். கடைந்த தயிரை ஒரு பாத்திரந்தில் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.

சுவையான தயிர் பச்சடி தயார்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

wonderful Receipes .vwey tasty and very usefulto cook easily.nice presentation.name-lakshmi

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...