• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

மசாலா சாதம்


தேவையானப்பொருட்கள்:

அரிசி - 1 கப்
பச்சை கொத்துமல்லி தழை (பொடியாக நறுக்கியது) - 1 டேபிள்ஸ்பூன்
காரட் - சிறு துண்டுகளாக வெட்டியது - 1 டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
கரம் மசாலாத் தூள் - ஒரு சிட்டிகை
நெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசியை குழையவிடாமல், பொல பொலவென்று சாதமாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் நெய்யை விட்டு, சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்தவுடன் அதில் முந்திரிப்பருப்பு, காரட் துண்டுகள், பச்சை மிளகாய் (கீறிப்போடவும்), கறிவேப்பிலைச் சேர்த்து வதக்கவும். முந்திரிப்பருப்பு சற்று சிவக்க வறுபட்டதும், அத்துடன் மஞ்சள் தூள், கரம் மசாலாத்தூள், கொத்துமல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்து ஒரு கிளறு கிளறவும். பின்னர் அதில் சாதம் மற்றும் உப்பு போட்டு நன்றாகக் கிளறி, இறக்கி வைக்கவும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...