• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

மொச்சைக்கொட்டை குழம்பு


தேவையானப்பொருட்கள்:

மொச்சைக்கொட்டை - 1 கப்
புளி - எலுமிச்சம் பழ அளவு
சாம்பார் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணை - 2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 4 அல்லது 5
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் மொச்சைக்கொட்டையை சிவக்க வறுத்து, குக்கரில் போட்டு அத்துடன் 2 கப் தண்ணீர் சேர்த்து, 3 அல்லது 4 விசில் வரும் வரை வேகவிட்டு எடுத்து வைத்துக் கொள்ளவும்.

உப்பு, புளி இரண்டையும் ஒரு கப் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து, பிழிந்து, புளித்தண்ணீரைத் தனியாக எடுக்கவும். புளித்தண்ணீர் 3 கப் அளவிற்கு இருக்க வேண்டும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

தேங்காய்த்துருவலை விழுதாக அரைத்தெடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் புளித்தண்ணீரை ஊற்றி அதில் வேக வைத்த மொச்சைக்கொட்டை, சாம்பார் பொடி, மஞ்சள் தூள் சேர்த்துக் கலக்கி அடுப்பிலேற்றிக் கொதிக்க விடவும். குழம்பு நனறாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அதில் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை போட்டுக் கிளறவும். மிதமான தீயில் வைத்து மீண்டும் ஒரு 5 நிமிடம் கொதிக்க விட்டு, அதில் கடுகு, வெங்காயம், கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டி இறக்கி வைக்கவும்.

1 கருத்து:

anitha சொன்னது…

kamala, ivvaLavu naal engkirunthiirkaL? arumaiyaana Blog. ovvonRum muththukkaL.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...