• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

சோளச்சுண்டல்


தேவையானப்பொருட்கள்:

சோளக்கதிர் - 2
காரட் - 1
தக்காளி - 1
தேங்காய்த்துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் - 4
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
எலுமிச்சம் பழச்சாறு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

சோளக்கதிரை, இரண்டாக வெட்டி, குக்கரில் போட்டு சிறிது உப்பும் தண்ணீரும் சேர்த்து இரண்டு அல்லது மூன்று விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும். வெந்த சோளக்கதிர் சற்று ஆறியவுடன், அதிலிருந்து சோள முத்துக்களைத் தனியாக உதிர்த்தெடுக்கவும்.

பச்சைமிளகாயை, நீளவாக்கில் கீறிக் கொள்ளவும். காரட்டின் தோலை சீவி விட்டு துருவிக் கொள்ளவும். கறிவேப்பிலையையும் நீளவாக்கில் கிள்ளி வைக்கவும். தக்காளியை நீளவாக்கில் மெல்லியதாக வெட்டிக் கொள்ளவும். மேல் தோலும் சதையும் உள்ள பகுதியை மட்டும் உபகோகிக்கவும். விதை, மற்றும் சாற்றை நீக்கி விடவும். (செர்ரி தக்காளி கிடைத்தால் அதை அப்படியே உபயோகிக்கலாம்).

ஒரு வாணலியில் எண்ணை விட்டு கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு, பெருங்காய்த்தூள் சேர்த்து சிவக்க வறுக்கவும். கீறி வைத்துள்ள பச்ச மிளகாய், கறிவேப்பிலையைச் சேர்த்து சற்று வதக்கி, காரட் துருவலைச் சேர்த்து மீண்டும் ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். பின்னர் அதில் வேக வைத்துள்ள சோள முத்துக்களைப் போட்டு, உப்பையும் சேர்த்துக் கிளறி விடவும். கடைசியில் தேங்காய்த்துருவலைச் சேர்த்துக் கிளறி, இறக்கி வைக்கும் முன் தக்காளித்துண்டுகள், எலுமிச்சம் பழச்சாறு ஆகியவற்றைப் போட்டு நன்றாகக் கிளறி, உடனே இறக்கி வைக்கவும்.

சிறிது மாங்காய்த்துருவல், கொத்துமல்லித்தழை ஆகியவற்றைத் தூவி பரிமாறலாம்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...