• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

காரட் சூப்


தேவையானப்பொருட்கள்:

காரட் - 2
பெரிய வெங்காயம் - 1/2
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - ஒரு சிறு துண்டு
புதினா - சிறிது
உப்பு, மிளகு தூள் - தேவைக்கேற்றவாறு

செய்முறை:

வெங்காயத்தைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். காரட்டை தோல் சீவி, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். இஞ்சி, புதினா ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு சுத்தமான மெல்லிய துணியில் நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, புதினா ஆகியவற்றை வைத்து, ஒரு சிறு மூட்டையாகக் கட்டிக் கொள்ளவும்.

குக்கரில், வெட்டி வைத்துள்ள காரட், வெங்காயம் ஆகியவற்றைப் போட்டு, காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்க்கவும். அதில் கட்டி வைத்துள்ள மிளகாய் முடிச்சைப் போடவும். சிறிது உப்பையும் சேர்த்து 2 அல்லது 3 விசில் வரும் வரை வேக வைத்தெடுக்கவும். குக்கர் ஆறியபின் , குக்கரைத் திறந்து, அதிலுள்ள மிளகாய் முடிச்சை எடுத்து அப்படியே குக்கரில் பிழிந்து விடவும். வெந்த காரட்டை மிக்ஸியில் போட்டு அரைத்தெடுத்து, வடிகட்டவும். வடிகட்டிய சூப்பை மீண்டும் அடுப்பிலேற்றி சிறிது கொதிக்கவிடவும். சூப் கொதித்து தேவையான பதத்திற்கு வந்ததும், கீழே இறக்கி வைத்து, கிண்ணங்களில் ஊற்றி பரிமாறவும்.

பரிமாறும் முன் அத்துடன் சிறிது பாலாடைக்கட்டியைத் துருவி அலங்கரித்துக் கொடுக்கலாம். அல்லது கிரீம் சிறிது சேர்க்கலாம். வறுத்த ரொட்டித்துண்டுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.

குறிப்பு: காரட்டையும், வெங்காயத்தையும், சிறிது வெண்ணையிலோ அல்லது நெய்யிலோ வதக்கி வேக வைத்தால், சுவை கூடுதலாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...