• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

வெந்தய மாங்காய்


தேவையானப்பொருட்கள்:

மாங்காய் - 1
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
நல்லெண்ணை - 1 டேபிள்ஸ்பூன்

செய்முறை:

மாங்காயை சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். அதில் மிளகாய்த் தூளைத் தூவி வைத்துக் கொள்ளவும்.

வெந்தயத்தை, வெறும் வாணலியில் போட்டு சிவக்க வறுத்தெடுத்து, பொடித்துக் கொள்ளவும்.

வறுத்தெடுத்த வெந்தயப் பொடியையும், உப்பையும் மாங்காய் துண்டுகளுடன் கலக்கவும்.

ஒரு சிறு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும், கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், பெருங்காயத்தூளைச் சேர்த்து, உடனடியாக மாங்காய் துண்டுகளின் மேல் ஊற்றி நன்றாகக் கிளறி விடவும்.

ஓரிரு தினங்களுக்கு கெடாமல் இருக்கும். தயிர் சாதத்தினுடன் பரிமாற சுவையாயிருக்கும்.

2 கருத்துகள்:

ADHI VENKAT சொன்னது…

ஆஹா! பார்க்கும் போதே நாக்கில் எச்சில் ஊறுகிறது.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

Super Preparation ! Thanks U Madam

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...