• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

சேமியா அல்வா


தேவையானப்பொருட்கள்:

சேமியா - 1 கப்
சர்க்கரை - 1/2 கப்
பால் - 1 கப்
நெய் - 2 முதல் 3 டீஸ்பூன் வரை
முந்திரிப்பருப்பு - சிறிது
ஏலக்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
கேசரி பவுடர் - ஒரு சிட்டிகை
பொடியாக நறுக்கிய முந்திரி/பாதாம்/பிஸ்தா - அலங்கரிக்க (விருப்பப்பட்டால்)

செய்முறை:

ஒரு வெறும் வாணலியில் சேமியாவைப் போட்டு சற்று சிவக்கும் வரை (அல்லது தொட்டால் கை சுடும் வரை) வறுத்து எடுத்து ஆற விடவும். பின்னர் அதை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். ஒரு கப் சேமியாவிற்கு 1/2 கப் பொடி கிடைக்கும்.

அடி கனமான வாணலியில் பால், சர்க்கரை, சேமியா பொடி ஆகியவற்றைப் போட்டுக் கிளறி விடவும்.  பின்னர் அதை அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும்.  பின்னர் அதில் கேசரி பவுடரைச் சேர்த்துக் கிளறி விடவும்.  கடைசியில் நெய்யைச் சேர்த்து பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரைக் கிளறவும்.  முந்திரிப்பருப்பை சிறிது நெய்யில் வறுத்து அல்வாவில் சேர்க்கவும்.  ஏலக்காய்த் தூளையும் சேர்த்து கிளறி, ஒரு நெய் தடவிய பாத்திரத்தில் கொட்டி பரப்பி விடவும்.  பொடியாக நறுக்கிய பருப்புகளை அதன் மேல் தூவி விடவும்.

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

ஆஹா... 'தகதக'வென்று மின்னுகிறது...

கோமதி அரசு சொன்னது…

நீங்கள் சொல்லும் முறையில் செய்தது இல்லை செய்து பார்க்கிறேன்.
நன்றி.

Udayamalar சொன்னது…

Sema Super mam...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...