• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

சம்பா சாதம் (மிளகு, சீரக சாதம்)


சம்பா சாதமும் (மிளகு, சீரக சாதம்), கத்திரிக்காய் கொஸ்தும், சிதம்பரம் கோவிலில் நடராஜருக்கு படைக்கப்படும் பிரசாதமாகும். 

தேவையானப்பொருட்கள்:

புழுங்கலரிசி - 2 கப்
மிளகு - 3 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
நெய் - 3 முதல் 4 டீஸ்பூன் வரை
முந்திரிப்பருப்பு - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

அரிசியைக் கழுவி குக்கரில் போட்டு அத்துடன் 5 கப் தண்ணீரை விட்டு 4 அல்லது 5 விசில் வரும் வரை வேக விட்டு வைத்துக் கொள்ளவும்.

வெறும் வாணலியில் மிளகு, சீரகம் இரண்டையும் தனித்தனியாகப் போட்டு வறுத்தெடுத்து, கொரகொரப்பாகப் பொடித்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியை அடுப்பிலேற்றி அதில் நெய்யை விட்டு முந்திரிப்பருப்பைப் போடவும்.  முந்திரி சற்று சிவந்ததும் அதில் வேக வைத்துள்ள சாதம், மிளகு, சீரகப் பொடி, உப்பு ஆகியவற்றை போட்டு, நன்றாகக் கலந்து, இறக்கி கத்திரிக்காய் கொஸ்துடன் பரிமாறவும்.


கவனிக்க:  அதிக காரம் விரும்பாதவர்கள், மிளகு, சீரகப் பொடியை சற்று குறைத்துக் கொள்ளவும்.  அல்லது நெய்யைக் கூட்டிக் கொள்ளவும்.




1 கருத்து:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

குறித்துக் கொண்டாயிற்று...

நன்றி...

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...