மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.

இந்த தளத்தில்

கேரட் கடலை சட்னி


தேவையானப் பொருட்கள்:

கேரட் - 2
காய்ந்த மிளகாய் - 5
வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
புளி - கொட்டைப்பாக்களவு
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - சிறிய துண்டு
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு - 1 டீஸ்பூன்

செய்முறை:

கேரட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

வாணலியில் சிறிது எண்ணை ஊற்றி அதில் பெருங்காயம், உளுத்தம் பருப்பு, மிளகாய், புளி ஆகியவற்றை தனித்தனியாக வறுத்துக் கொள்ளவும். கடைசியில் கேரட்டை சேர்த்து சிறிது நேரம் வதக்கி இறக்கவும். ஆறியபின் உப்பு, வேர்க்கடலை சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்.

கடுகு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும்.

0 மறுமொழி: