• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

தக்காளி கறிவேப்பிலைச் சட்னி


தேவையானப்பொருட்கள்:

தக்காளி - 4
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
காய்ந்த மிளகாய் - 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு பட்டாணி அளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

தக்காளியை 4 அல்லது 5 துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டுக் காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், பெருங்காயம், சீரகம், கடலைப்பருப்பு ஆகியவற்றைச் சேர்த்து பருப்பு சிவக்கும் வரை வறுக்கவும். பின்னர் அத்துடன் மிளகாயைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வறுத்தவுடன், இஞ்சியைச் சேர்த்து வதக்கவும். பின் கறிவேப்பிலையைச் சேர்த்து வதக்கி கடைசியில் தக்காளித் துண்டுகளையும் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி எடுத்து ஆற விடவும். பின்னர் உப்பு சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...