• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

பூண்டு கத்திரிக்காய் புளிக்குழம்பு


ஆச்சி வத்தக்குழம்பு மசாலா உபயோகித்து இந்தக் குழம்பை செய்தேன். சுவை நன்றாக இருந்தது. இல்லையென்றால் வீட்டில் தயாரித்த வத்தக்குழம்பு பொடியை இதற்கு உபயோகிக்கலாம்.

தேவையானப்பொருட்கள்:

கத்திரிக்காய் - 4
பூண்டு பற்கள் - 20 முதல் 25 வரை
சாம்பார் வெங்காயம் - 10 முதல் 15 வரை
புளி - எலுமிச்சம் பழ அளவு
வத்தக்குழம்பு பொடி - 2 டீஸ்பூன் (குவித்து அளக்கவும்)
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
நல்லெண்ணை - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்துமல்லி - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

பூண்டு, வெங்காயத்தை தோலுரித்துக் கொள்ளவும். கத்திரிக்காயை நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டி தண்ணீரில் போட்டு வைக்கவும்.

புளியை ஊற வைத்து, கரைத்து சாற்றை வடிகட்டிக் கொள்ளவும். தேவையான தண்ணீரைச் சேர்த்து இரண்டரைக் கப் அளவிற்கு புளித்தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். அதில் உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், வத்தக்குழம்பு பொடி ஆகியவற்றைச் சேர்க்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், பூண்டு, வெங்காயம் (முழுதாக சேர்க்கவும்), கறிவேப்பிலை, கொத்துமல்லி ஆகியவற்றைச் சேர்த்து 2/3 நிமிடங்கள் வதக்கவும் பின்னர் அதில் கத்திரிக்காய் துண்டுகளைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கி, புளித்தண்ணீரைச் சேர்க்கவும். தேவைப்பட்டால் மேலும் சிறிது நீரைச் சேர்த்துக் கிளறி விடவும். மூடி போட்டு, மிதமான தீயில் கொதிக்க விடவும். காய் வெந்து, எண்ணை பிரிய ஆரம்பித்ததும், இறக்கி வைக்கவும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...