• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

கீரை சாதம்


தேவையானப்பொருட்கள்:

அரிசி - 1 கப்
கீரை (ஏதாவது ஒரு வகை) - 1 கட்டு
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு பற்கள் - 4
பச்சை மிளகாய் - 2
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
நல்லெண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
வேர்க்கடலை - 1 டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)
முந்திரி பருப்பு - 1 டேபிள்ஸ்பூன் (விருப்பப்பட்டால்)

செய்முறை:

சாதத்தை உதிர் உதிராக வடித்துக் கொள்ளவும்.

கீரையை நன்றாக அலசி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாகக் கீறிக் கொள்ளவும். பூண்டை நசுக்கி கொள்ளவும் அல்லது பொடியாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை, முந்திரி பருப்பு சேர்த்து சற்று சிவக்க வறுக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கியவுடன், தக்காளி சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கி, அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள் உப்பு சேர்த்துக் கிளறி விடவும். பின்னர் அதில் கீரையைச் சேர்த்து வதக்கவும். தண்ணீர் விட தேவையில்லை. கீரையிலுள்ள நீர்ச்சத்தே போதுமானது. அடுப்பை சிறு தீயில் வைத்து, அடிக்கடி கிளறி விட்டு, கீரை நன்றாக சுண்டும் வரை வதக்கவும். கடைசியில், வடித்த சாதத்தைக் கொட்டிக் கிளறி விடவும்.

அப்பளம்/காய்கறி சிப்ஸ் ஆகியவற்றுடன் பரிமாறவும்.

1 கருத்து:

Ponnammal சொன்னது…

Brinjal Sadam is very very tasty.

Ponnammal Balasubramanian

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...