• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

கத்திரிக்காய் வதக்கல்


தேவையானப்பொருட்கள்:

கத்திரிக்காய் - 5 அல்லது 6
புளி - ஒரு பெரிய நெல்லிக்காயளவு
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
கறி பவுடர் - 4 முதல் 5 டீஸ்பூன் வரை

வறுத்து பொடிக்க:

எள் - 3 டீஸ்பூன்
வேர்க்கடலை - 2 டீஸ்பூன்

தாளிக்க:

எண்ணை - 3 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/4 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

புளியை சிறிது தண்ணீரில் ஊற வைத்து, கெட்டியாக சாறு எடுத்து வைக்கவும்.

வெறும் வாணலியில் எள்ளைப் போட்டு "படபட" என்று பொரியும் வரை வறுத்தெடுத்து ஆற விடவும். பின்னர் அத்துடன் வேர்க்கடலையும் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.

கத்திரிக்காயைக் கழுவி, காம்பு பகுதியை அப்படியே விட்டு விட்டு, அடி பாகத்தை மட்டும் நான்காக  கீறிக் கொள்ளவும்.

கீறிய முழு கத்திரிக்காயின் உள்ளே ஒரு டீஸ்பூன் கறி பவுடரை போடவும்.  நான் இதில் "கறிவேப்பிலைப் பொடியை" உபயோகித்துள்ளேன்.  அவரவர் விருப்பத்திற்கேற்றார்போல், இட்லி மிளகாய் பொடி, பொரியல் பொடி போன்ற எந்தவொரு பொடியையும் உபயோகிக்கலாம்.

அடி கனமான ஒரு வாணலியை அடுப்பிலேற்றி எண்ணை விடவும்.  எண்ணை காய்ந்ததும் கடுகு போடவும்.  கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் பெருங்காயம், சீரகம், கறிவேப்பிலை சேர்க்கவும்.  பின்னர் அதில் கத்திரிக்காயைச் சேர்த்து, இலேசாக பிரட்டி விடவும்.  மூடி போட்டு, சிறு தீயில் வைத்து வேக விடவும். கத்திரிக்காய் பாதி வெந்ததும், அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து பிரட்டி விட்டு, புளிச்சாறை சேர்க்கவும்.  தேவைப்பட்டால் சிறிது தண்ணீரையும் சேர்த்து, மீண்டும் சில நிமிடங்கள் வேக விடவும். கடைசியில் பொடித்து வைத்துள்ள எள் மற்றும் வேர்க்கடலைப் பொடியைத் தூவி கிளறி விடவும்.  கத்திரிக்காய் நன்றாக வதங்கியதும், இறக்கி வைக்கவும்.

சாதம், சப்பாத்தி இவற்றுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.


3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

சூப்பரா இருக்குங்க... நன்றி...

வாழ்த்துக்கள்...

Unknown சொன்னது…

Paarka migavum nanraga hulladhu.

பெயரில்லா சொன்னது…

Enkku romba pudicha dish

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...