• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

காராமணி வடை


தேவையானப் பொருட்கள்:

காராமணி - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 2
இஞ்சி - 1 சிறு துண்டு
கொத்துமல்லித்தழை - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1/2 டீஸ்பூன்
எண்ணை - பொரிப்பதற்கு

செய்முறை:

காராமணியை குறைந்தது 6 அல்லது 7 மணி நேரம் ஊறவைத்து, கழுவி, ஒரு சுத்தமானத் துணியில் உலரவிடவும். தண்ணீரைத் துணி இழுத்துக் கொண்டால் போதும். நீண்ட நேரம் காயத் தேவையில்லை.

வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கொத்துமல்லி, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

உலரவைத்த காராமணியுடன் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். தண்ணீர் சேர்க்க தேவையில்லை.

அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயம், மிளகாய் எல்லாவற்றையும் சேர்த்து கெட்டியாகப் பிசையவும்.

ஒரு வாணலியில் எண்ணையைக் காய வைக்கவும். ஒரு எலுமிச்சம் பழ அளவு மாவை எடுத்து உருட்டி உள்ளங்கையில் வைத்து லேசாகத் தட்டி, நடுவில் துளையிட்டு எண்ணையில் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...