தேவையானப்பொருட்கள்:
புளி - எலுமிச்சம் பழ அளவு
பெரிய வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 3 அல்லது 4
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
செய்முறை:
புளியைத் தண்ணீரில் ஊற வைத்து, கரைத்து சாற்றைப் பிழிந்தெடுக்கவும். தேவையான நீரைச் சேர்த்து, 3 கப் புளித்தண்ணீரை எடுத்து வைத்துக்கொள்ளவும்.
வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு போடவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும், தீயைத் தணித்துக் கொண்டு வெந்தயத்தைச் சேர்த்து சற்று சிவக்க வறுக்கவும். காய்நத மிளகாயை ஒன்றிரண்டாகக் கிள்ளிப் போடவும். அத்துடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தையும், கறிவேப்பிலையையும் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று மினுமினுப்பாக வதங்கியதும் புளித்தண்ணீரை விடவும். அத்துடன் உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்றாகக் கொதிக்க ஆரம்பித்ததும், அடுப்பை தணித்து மிதமான தீயில் மேலும் 2 அல்லது 3 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.
சூடான சாதத்துடன் சேர்த்து பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். தொட்டுக்கொள்ள அப்பளம் பொருத்தமாயிருக்கும். பார்ப்பதற்கு ரசம் போலும், சுவையில் புளிக்காய்ச்சல் போலவும் இருக்கும்.
காய்கறிகள் கையிருப்பில் இல்லாத பொழுது, அவசரத்திற்கு இந்தச் சாறு கை கொடுக்கும்.
4 கருத்துகள்:
Wesite looks Awesome...
Thank you Eliza.
THAKKALI PACHADI ARUMAI. i LIKE VERY MUCH
நன்றி தமயந்தி.
கருத்துரையிடுக