• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

குடமிளகாய் சட்னி


தேவையானப்பொருட்கள்:

குடமிளகாய் - 2 (சிவப்பு நிற மிளகாய் உகந்தது)
காய்ந்த மிளகாய் - 4
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பூண்டுப்பற்கள் - 4
புளி - ஒரு நெல்லிக்காயளவு
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

குடமிளகாயை, விதை நீக்கி விட்டு நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு அதில் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பைப் போட்டு சிவக்கும் வரை வறுக்கவும். பருப்பு சிவநதவுடன் அதில் காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து சற்று வதக்கவும். பின்னர் அதில் குடமிளகாய்த் துண்டுகளைச் சேர்த்து ஓரிரு நிமிடங்கள் வதக்கவும். கடைசியாக புளியையும் சேர்த்து வதக்கி, இறக்கி ஆற விடவும்.

பின்னர் அதில் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்தெடுத்து, கடுகு, கறிவேப்பிலைத் தாளித்துக் கொட்டவும்.

கவனிக்க: சிவப்பு நிற குடமிளகாய் உபயோகித்தால் சட்னி நல்ல நிறமாக இருக்கும். பச்சை நிற மிளகாயிலும் செய்யலாம். சுவையில் மாற்றமிருக்காது. ஆனால் சட்னியின் நிறம் சற்று மங்கலாக இருக்கும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...