• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

கொத்துமல்லி சட்னி - III


தேவையானப்பொருட்கள்:

பச்சை கொத்துமல்லி - 1 கட்டு
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு பட்டாணி அளவு
பச்சை மிளகாய் - 4
இஞ்சி - ஒரு சிறு துண்டு
புளி - ஒரு சிறிய நெல்லிக்காயளவு
உப்பு - 3/4 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 2 டீஸ்பூன்

செய்முறை:

கொத்துமல்லியை நன்றாக அலசி, பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இஞ்சியின் தோலை சீவி விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பச்சை மிளகாயை, இரண்டாகக் கீறிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் பெருங்காய்ம், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றைப் பொன்னிறமாக வறுத்தெடுக்கவும். அதே வாணலியில் மேலும் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் புளி, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை ஓரிரு வினாடிகள் வதக்கவும். பின்னர் அதில் தேங்காய்த்துருவலைச் சேர்த்து, ஈரப்பசை போகும் வரை வதக்கவும். கடைசியில் கொத்துமல்லியைச் சேர்த்து ஓரிரு வினாடிகள் வதக்கி, இறக்கி வைத்து ஆற விடவும்.

வறுத்த பருப்புகளையும், மற்ற அனைத்தையும் உப்பு மற்றும் சிறிது தண்ணீரைச் சேர்த்து விழுதாக அரைத்தெடுக்கவும்.

4 கருத்துகள்:

ஆயிஷா சொன்னது…

கொத்துமல்லி சட்னி சூப்பர்.

கமலா சொன்னது…

நன்றி ஆயிஷா.

அன்புடன் மலிக்கா சொன்னது…

கமலா
உங்களை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்
வந்து பாருங்கள்..
http://blogintamil.blogspot.com/2011/02/blog-post_02.html

கமலா சொன்னது…

மிக்க நன்றி மலிக்கா.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...