• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

மைதா பூரி


தேவையானப்பொருட்கள்:

மைதா - 1 கப்
ரவா - 2 டேபிள்ஸ்பூன்
எண்ணை அல்லது நெய் - 1 டேபிள்ஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

மைதா, ரவா, உப்பு, நெய் அல்லது எண்ணை ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் சிறிது சிறிதாக தண்ணீரை விட்டு, மிருதுவாகப் பிசைந்து, ஈரத்துணியால் மூடி, குறைந்து 1/2மணி நேரம் அப்படியே வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி சூடாக்கவும்.

பிசைந்து வைத்துள்ள மாவிலிருந்து, சிறிது எடுத்து, உருட்டி பூரியாக இடவும். (மிகவும் மெல்லியதாகவும் இருக்கக் கூடாது, தடிமனாகவும் இருக்க கூடாது). சுட வைத்துள்ள எண்ணையில் போட்டு பொரித்தெடுக்கவும்.

உருளைக்கிழங்கு தயிர் மசாலாவுடன் சாப்பிட சுவையாயிருக்கும்.

5 கருத்துகள்:

கோமதி அரசு சொன்னது…

மைதா பூரி அருமை.

கோமதி அரசு சொன்னது…

மைதா பூரி அருமை.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

நன்றாக உள்ளது! செய்து பார்போம்.
தங்களுக்கு மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
அன்புடன் அழைக்கிறேன் :
"மெய்ப் பொருள் காண்பது அறிவு-ஏன்?"

rishvan சொன்னது…

... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களேன்...

gwl சொன்னது…

Good recipe, would like to try it out defnaitely.
giftwithlove.com

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...