• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

அன்னாசி சாதம்

தேவையானப்பொருட்கள்:

சாதம் - 1 கிண்ணம் (இருவருக்கு தேவையான அளவு)
அன்னாசிப்பழம் (சிறு துண்டுகளாக நறுக்கியது) - 1 கப்
வெங்காயம் - பாதி
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டு - 3 அல்லது 4 பற்கள்
கொத்துமல்லி இலை - சிறிது
புதினா - சிறிது
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகு (கொரகொரப்பாகப் பொடித்தது) - 1 டீஸ்பூன்
எண்ணை - 1 டேபிள்ஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்துமல்லி, புதினா ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.   அடி கனமான வாணலியை அடுப்பிலேற்றி எண்ணை விடவும்.  அதில் அன்னாசிப்பழத் துண்டுகளைப் போட்டு சில நிமிடங்கள் வதக்கவும்.  அத்துடன் இஞ்சி, பூண்டு துண்டுகளைச் சேர்த்து சில வினாடிகள் வதக்கியபின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.  பின்னர் கொத்துமல்லி, புதினா இலைகளைச் சேர்த்து சற்றி வதக்கி, அதில் மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கிளறி விடவும்.  அதில் 2 அல்லது 3 கை நீரைத் தெளித்து மூடி வைத்து சிறு தீயில் சில வினாடிகள் வேக விடவும். பின்னர் மூடியைத் திறந்து, நீர் வற்றும் வரை கிளறி விடவும்.  அதில் சாதத்தைப் போட்டு, அதன் மேல் மிளகுத்தூளைத் தூவி, அடுப்பை சற்று பெரிய தீயில் வைத்து, ஓரிரு கிளறு கிளறி இறக்கி வைக்கவும்.  இறக்கி வைத்தப் பின் எலுமிச்சை சாறைச் சேர்த்து கிளறி, கொத்துமல்லி இலைத் தூவி பரிமாறவும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...