• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

வாழைக்காய் பச்சைப்பயறு கூட்டு


தேவையானப் பொருட்கள்:

வாழைக்காய் - 1
பச்சைப்பயறு - 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 4 அல்லது 5
தேங்காய்த்துருவல் - 1/2 கப்
உளுத்தம் பருப்பு -  2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காய்த்தூள் - ஒரு சிட்டிகை
பூண்டு பற்கள் -  4 (விருப்பப்பட்டால்)
கறிவேப்பிலை - 1 ஈர்க்கு

செய்முறை:

பச்சைப்பயிறை 6 அல்லது 8 மணி நேரம் ஊறவைத்துக் கொள்ளவும்.

வாழைக்காயை தோல் சீவி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு டீஸ்பூன் எண்ணையில், காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, சீரகம் ஆகியவற்றை வறுத்தெடுத்து அத்துடன், புளி, தேங்காய்த்துருவல் சேர்த்து   நைசாக அரைத்துக் கொள்ளவும்.

குக்கரில் ஊறவைத்த பயறை போட்டு அது மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு, அத்துடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 1 அல்லது 2 விசில் வரும் வரை வேகவிடவும்.

வாழைக்காய் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அவை மூழ்கும் அளவிற்கு தண்ணீரை விட்டு, உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வேக வைத்து, அதிகப்படியான நீரை வடிகட்டி விட்டு, காயை தனியாக எடுத்து வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு சேர்க்கவும். கடுகு வெடிக்க ஆரம்பித்ததும் அதில் பெருங்காய்த்தூள், கறிவேப்பிலைச் சேர்க்கவும். (பூண்டு சேர்ப்பதானால், பூண்டை தோலுடன் சற்று நசுக்கி சேர்க்கவும்).  பின்னர் அதில் வேக வைத்துள்ள வாழைக்காய், பயறு மற்றும் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுது ஆகியவற்றைச் சேர்த்து, தேவையானால் சிறிது தண்ணீரையும் சேர்த்துக் கிளறி விடவும். உப்பைப் போட்டு மீண்டும் ஒரு கொதி வரும்வரை அடுப்பில் வைத்து, இறக்கி வைக்கவும்.

சூடான சாதத்துடன் பிசைந்து, அப்பளம் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும்.

சப்பாத்தி, பூரியுடனும் சேர்த்து பரிமாறலாம்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...