• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

வெங்காயத்தொக்கு


தேவையானப்பொருட்கள்:

பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
சாம்பார் பொடி 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் 1/4 டீஸ்பூன்
எண்ணை 1 டேபிள்ஸ்பூன்
கடுகு 1/2 டீஸ்பூன்
சீரகம் 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை சிறிது
உப்பு 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு, சூடானதும் கடுகு போடவும். கடுகு வெடித்தவுடன், சீரகம், பெருங்காயத்தூள், கறிவேப்பிலைச் சேர்த்து, சற்று வதக்கவும். பின் வெங்காயத்தைச் சேர்த்து, பச்சை வாசனைப் போகும் வரை வதக்கவும். பின்னர், தக்காளியைச் சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கவும். கடைசியில், சாம்பார் பொடி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, நன்றாகக் கிளறி விடவும். சிறு தீயில் வைத்து சிறிது நேரம் வத‌க்கி, கீழே இறக்கி வைக்கவும்.

தோசை, இட்லி, சப்பாத்தியுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.

குறிப்பு: தக்காளி வத‌க்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வதக்கினால், சீக்கிரம் வதங்கி விடும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...