• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

காலிஃபிளவர் மசாலா


தேவையானப்பொருட்கள்:

காலிஃபிளவர் - 1
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - ஒரு சிறு துண்டு
பூண்டுப்பற்கள் - 4 அல்லது 5
கசகசா - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - 20
சாம்பார் பொடி - 2 டீஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தயிர் - 1/2 கப்
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணை - 4 டேபிள்ஸ்பூன்
கொத்துமல்லித்தழை - சிறிது

செய்முறை:

காலிஃபிளவரை தண்டு நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

வெட்டியத்துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் தயிர், சீரகத்தூள், ஒரு டீஸ்பூன் சாம்பார் பொடி, கரம் மசாலாத்தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்துப் பிசறி விட்டு சற்று நேரம் ஊற விடவும்.

வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

முந்திரிப்பருப்பு, கசகசா இரண்டையையும் சிறிது தண்ணீர் சேர்த்து மிருதுவாக அரைத்தெடுக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணை விட்டு சூடானதும் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் தக்காளித் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கிளறி விடவும்.

பின்னர் அத்துடன் ஊற வைத்துள்ள காலிஃபிளவர் துண்டுகளைப் போட்டுக் கிளறி மூடி வைத்து, மிதமான தீயில் பத்து நிமிடங்கள் வேக விடவும். பின்னர் அதில் முந்திரி விழுதைப் போட்டுக் கிளறி மீண்டும் ஒரு கொதி வரும் வரை அடுப்பில் வைத்திருந்து, இறக்கி வைக்கவும்.

கொத்துமல்லித்தழையைத் தூவி பரிமாறவும்.

சப்பாத்தி, பூரியுடன் சாப்பிட சுவையாயிருக்கும்.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Hi Kamla amma
I tried this receipe it was sup.thanks

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...