• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

ஜாமூன் மிக்ஸ் காய்கறி பகோடா

  
தேவையானப்பொருட்கள்:

ஜாமுன் மிக்ஸ் பவுடர் - 1 கப்
கடலை மாவு - 2 டேபிள்ஸ்பூன்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
கேரட் (நடுத்தர அளவு) - 1
பீன்ஸ் - 4 அல்லது 5
முட்டைக்கோஸ் - ஒரு சிறு துண்டு
பச்சை பட்டாணி - ஒரு கைப்பிடி
கீரை - சிறிது
வெங்காயம் - 1
 இஞ்சி - ஒரு சிறு துண்டு
சோம்பு - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 2 சிட்டிகை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

மற்ற காய்கறி, கீரை ஆகியவற்றையும் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.  பட்டாணியை ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும் அல்லது மிக்ஸியில் போட்டு 2 சுற்று சுற்றி எடுக்கவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில், ஜாமுன் மிக்ஸ், கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், பெருங்காயத்தூள், சோம்பு, உப்பு ஆகியவற்றைப் போட்டு கலந்துக் கொள்ளவும். பின்னர் அத்துடன் நறுக்கி வைத்துள்ள, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, காய்கறிகள் அனைத்தையும் போட்டு கிளறி விடவும்.  2 டேபிள்ஸ்பூன் எண்ணையை சூடாக்கி, மாவின் மேல் கொட்டி, ஸ்பூனால் கிளறி விடவும்.  பின்னர் சிறிது தண்ணீரைத் தெளித்து கெட்டியாக பிசைந்துக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணையை ஊற்றி காய விடவும்.  அடுப்பை மிதமான தீயில் வைத்துக் கொள்ளவும்.  மாவை சிறிது சிறிதாகக் கிள்ளி எண்ணையில் போட்டு சிவக்க பொரித்தெடுக்கவும்.

கவனிக்க:  இந்த பக்கோடாவை கடலை மாவு மற்றும் அரிசி மாவில் மட்டும் செய்யலாம்.  அப்படி செய்வதென்றால் 1 கப் கடலை மாவிற்கு, 1/2 கப் அரிசி மாவு சேர்த்து செய்யவும்.    மீந்து போன ஜாமுன் மிக்ஸ் கை வசம் இருந்ததால், அதை தீர்ப்பதற்காக, இதில் சேர்த்து செய்துள்ளேன்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...