• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

முருங்கைக்காய் பொரிச்சக்குழம்பு


தேவையானப் பொருட்கள்:

முருங்கைக்காய் - 2
பயத்தம்பருப்பு - 1/2 கப்
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
அரிசி - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சாம்பார் வெங்காயம் - 4
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

முருங்கைக்காயை மூன்று அங்குலத் துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

பயத்தம் பருப்பை சிறிது மஞ்சள் தூள் சேர்த்து, மலர வேகவைத்துக் கொள்ளவும். குழைய விட வேண்டாம்.

ஒரு பாத்திரத்தில், முருங்கைக்காய் துண்டுகளைப் போட்டு, காய்கள் மூழ்கும் அளவிற்கு தண்ணீரை ஊற்றவும். அதில், சாம்பார் பொடி, சிறிது மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வேகவிடவும்.

தேங்காய் துருவல், பச்சை மிளகாய், சீரகம், அரிசி ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

காய் வெந்தவுடன், வேக வைத்த பயத்தம் பருப்பை லேசாக மசித்து சேர்க்கவும். ஒரு கொதி வந்தவுடன், அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதை சிறிது தண்ணீருடன் கலக்கி குழம்பில் ஊற்றவும். நன்றாகக் கிளறி விட்டு மீண்டும் கொதிக்க விடவும்.

குழம்பு நன்றாகக் கொதித்தவுடன், கடுகு, கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய வெங்காயம் ஆகியவற்றை தாளித்துக் கொட்டவும்.

கருத்துகள் இல்லை:

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...