• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

கறிவேப்பிலை எள்ளுப் பொடி


தேவையானப்பொருட்கள்:

வெள்ளை எள் - 1 கப்
கறிவேப்பிலை - 1/2 கப்
கடலைப்பருப்பு - 1/2 கப்
பெருங்காயம் - ஒரு சிறு துண்டு
காய்ந்த மிளகாய் - 5 முதல் 6 வரை
உப்பு - 1 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

செய்முறை:

வெறும் வாணலியில் எள்ளைப் போட்டு சற்று சிவக்க வறுத்தெடுக்கவும்.  அதே வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு அதில் கடலைப்பருப்பு, பெருங்காயம், மிளகாய் ஆகியவற்றைத் தனித்தனியாகப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும்.  கடைசியில் கறிவேப்பிலையைப் போட்டு ஓரிரு வினாடிகள் வதக்கி எடுத்து ஆற விடவும்.  பின்னர் எல்லாவற்றையும் ஒன்றாக மிக்ஸியில் போட்டு, அத்துடன் உப்பையும் சேர்த்து பொடித்தெடுக்கவும்.

இதை இட்லி/தோசைக்கு தொட்டுக் கொள்ளலாம்.  சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.  காய்கறி பொரியல் செய்யும் பொழுது, கடைசியில் ஒரு டீஸ்பூன் இந்தப் பொடியைத் தூவி  எடுத்தால் சுவையாக இருக்கும்.

3 கருத்துகள்:

சசிகலா சொன்னது…

கறிவேப்பிளையை எடுத்து தனியே வைக்கும் பலருக்கும் சிறந்த டிப்.. நன்றிங்க.

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

உடல் நலத்திற்கு தேவையான நல்ல சமையல் குறிப்பு ! நன்றி சகோதரி !

கோமதி அரசு சொன்னது…

கருவேப்பிலை பொடி நன்றாக இருக்கிறது வெள்ளை எள் போட்டு செய்தது இல்லை செய்து பார்க்கிறேன்.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...