• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

கோதுமை கேரட் அல்வா

தேவையானப்பொருட்கள்:

கோதுமை மாவு - 1/2 கப்
கேரட் (நடுத்தர அளவு) - 2
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 3 முதல் 4 டேபிள்ஸ்பூன் வரை
ஏலக்காய் தூள் - 1/4 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது

செய்முறை:

கேரட்டை கழுவி, தோலை சீவி விட்டு, நடுத்தர அளவு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.  வெட்டிய கேரட் துண்டுகளை சிறிது நீர் சேர்த்து வேக விட்டு, சற்று ஆறியதும் மிக்ஸியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

அடி கனமான வாணலியில் நெய்யை விட்டு, அதில் கோதுமை மாவை போட்டு, மிதமான தீயில் நல்ல வாசனை வரும் வரை வறுக்கவும்.  பின்னர் அத்துடன் அரைத்து வைத்துள்ள கேரட் விழுதைச் சேர்த்துக் கிளறி விடவும். சர்க்கரையையும் சேர்த்து கை விடாமல் கிளறவும்.  சர்க்கரை நன்றாகக் கலந்து, அல்வா கெட்டியாக  பந்து போல்  பாத்திரத்தில் ஒட்டாமல்   வரும் பொழுது, ஏலக்காய் தூளைச் சேர்த்துக் கிளறி, தேவைப்பட்டால், மேலும் சிறிது  நெய்யையும் ஊற்றிக் கிளறி, நெய் தடவிய ஒரு கிண்ணத்திலோ, தட்டிலோ கொட்டிப் பரப்பி விடவும்.  முந்திரியை சிறிய துண்டுகளாக்கி, அல்வாவின் மேல் தூவி விடவும்.

கவனிக்க:  இனிப்பு அதிகம் தேவையென்றால், சர்க்கரையின் அளவை சிறிது கூட்டிக் கொள்ளவும்.

4 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

வாவ்... சூப்பர்...

கோமதி அரசு சொன்னது…

மிக நன்றாக இருக்கிறது அல்வா.

sudha சொன்னது…

Without water how to make

கமலா சொன்னது…

சுதா,

கேரட்டை வேக வைத்த நீருடன் அரைக்கும் பொழுது, விழுது சற்று தளர இருக்கும். இதை கோதுமை மாவில் சேர்த்து, சர்க்கரையும் சேர்க்கும் பொழுது, எல்லாம் நன்றாக இளகி அல்வா பதத்திற்கு வந்து விடும். தண்ணீர் எதுவும் சேர்க்க தேவையில்லை.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...