![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgcipk0_SnUa25nMA2mvGJJ1bDDoEBzaUcIvdnPjI3_-fctUX14PzZb7fs7CBtxaL8XDDOrHk_-Jn7rEoS5nMXYJFvXL5M00GsQRucjiGV5hZ8l5Z_QUCeJWrl_V2_Ijya3UOacaVSQU7Q/s400/untitled.jpg)
கிறிஸ்தோபர் கொலம்பஸ், முதன்முறையாக பப்பாளிப் பழத்தைச் சுவைத்தப் பொழுது, இதை "தேவதைகளின் பழம்" என்று வர்ணித்துள்ளார்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhWElfDC_JhI8lkYdsMXEDRcTX2p9dgPtlRoLoGumhqvSV-JvnJPMQh1gQOqytPX7jtK9qIH6fcrq8fXPL5YNPAbXozAuCNYew7Jli0iKAYL5mMR0daZy7PJEFmwzNO2NutTdBT3ZYhNpM/s400/2482091448_0c31045ee7.jpg)
பப்பாளிப்பழம், சாறு மிகுந்த, இனிப்பானப் பழம். இதில் ஆரோக்கியத்திற்குத் தேவையானச் சத்துக்கள், நிறைய இருக்கின்றன.
இது சீரண சக்தியை அதிகரிக்கும். இதய நோய், மூட்டு வலி, நுரையீரல் நோய், கண் நோய் ஆகியவைற்றை தடுக்க வல்லது.
இதில் வைட்டமின் "ஏ", "சி" மற்றும் நார்ச்சத்து நிறைய உள்ளது. இதில் உப்புச்சத்து குறைவாகவும், பொட்டாசியம் அதிகமாகவும் இருப்பதோடு, இதன் கலோரி அளவும் குறைவானது. மேலும், இது உடற் கொழுப்பின் அளவையும் குறைக்கக் கூடியது.
இதன் தோல், மற்றும் விதைகளை நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக்கி அப்படியே சாப்பிடலாம்.
அல்லது சுவையான "மில்க் ஷேக்" செய்தும் சாப்பிடலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக