• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

பொரியல் பொடி


இந்தப் பொடியை செய்து வைத்துக் கொண்டால், சுவையான பொரியலை சுலபமாக செய்யலாம்.

தேவையானப்பொருட்கள்:

கடலைப்பருப்பு - 1/2 கப்
உளுத்தம்பருப்பு - 1/2 கப்
காய்ந்தமிளகாய் - 10 முதல் 15 வரை
தனியா - 1/4 கப்
பெருங்காயம் - ஒரு சிறு நெல்லிக்காயளவு
உப்பு - 1 டீஸ்பூன்
எண்ணை - 1 அல்லது 2 டீஸ்பூன்

செய்முறை:

ஒரு வாணலியில் ஒரு டீஸ்பூன் எண்ணை விட்டு, மேற்கூறிய பொருட்களை(உப்பைத்தவிர), ஒவ்வொன்றாக தனித்தனியாக சிவக்க வறுத்தெடுக்கவும். சற்று ஆறியபின் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாக பொடி செய்யவும்.

காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளவும்.

விருப்பமான காயை பொடியாக நறுக்கி சற்று வேக வைத்து தாளித்து, இறக்கி வைக்குமுன், ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் இந்தப் பொடியைத் தூவிக் கிளறினால், சுவையானப் பொரியல் சுலபத்தில் தயார். காயை மைக்ரோ அவனில் வேக வைத்தால் சமையலும் சீக்கிரம் முடிந்து விடும். சத்தும் குறையாது.

1 கருத்து:

பெயரில்லா சொன்னது…

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...