• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

கறிவேப்பிலை சாதம் - இரண்டாம் வகை


தேவையானப்பொருட்கள்:

சாதம் - 1 கிண்ணம் (2 பேருக்கு தேவையான அளவு)
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு
எண்ணை - 1/2 டீஸ்பூன்
நெய் - 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு - சிறிது

 செய்முறை:

ஒரு சிறு வாணலியில் அரை டீஸ்பூன் எண்ணையை விட்டு அதி உளுத்தம் பருப்பு, மிளகு, சீரகம் ஆகியவற்றை ஓரிரு வினாடிகள் வறுத்து, அத்துடன் கறிவேப்பிலையையும் போட்டு மேலும் சில வினாடிகள் வறுத்து, இறக்கி ஆற விடவும்.  ஆறிய பின்னர் அத்துடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்றாகப் பொடித்துக் கொள்ளவும்.

வேறொரு வாணலியில் நெய்யை விட்டு சூடானதும் அதில் முந்திரிப்பருப்பு மற்றும் சிறிது கறிவேப்பிலையைப் போட்டு சற்று வறுக்கவும்.  அத்துடன் சாதம், பொடித்து வைத்துள்ள கறிவேப்பிலைப் பொடி இரண்டையும் சேர்த்துக் கிளறி இறக்கி வைக்கவும்.

 குறிப்பு:  இது சீக்கிரமாகச் செய்யக்கூடிய ஒரு வகை.  மீந்து போன  சாதத்திலும் இதை செய்யலாம்.

முதல் வகை செய்முறைக்கு . இங்கே சொடுக்கவும்

3 கருத்துகள்:

திண்டுக்கல் தனபாலன் சொன்னது…

செய்து பார்க்கிறோம்... நன்றி சகோ...

கவிஞர்.த.ரூபன் சொன்னது…

வணக்கம்

நல்ல செய்முறை விளக்கம் எல்லாவற்றையும் குறிப்பு எடுத்தாச்சி... செய்து பாரக்க... பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

gowthamivembunathan சொன்னது…

Hw to prepare pudhina sadham?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...