• Cooking and Recipes
  • Kolangal / Rangoli
  • அடுப்பங்கரை
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்.
 

வெள்ளைப்பூசணிக்காய் கூட்டு


தேவையானப்பொருட்கள்:

வெள்ளைப்பூசணிக்காய் - ஒரு நடுத்தர அளவு துண்டு
கடலைப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய்த்துருவல் - 1/4 கப்
பச்சை மிளகாய் - 2
சீரகம் - 1 டீஸ்பூன்
அரிசி - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை
உப்பு - 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு

தாளிக்க:

எண்ணை - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை:

வெள்ளைப்பூசணிக்காயின் தோலை நீக்கி விட்டு, அதன் மத்தியிலுள்ள விதை மற்றும் வெள்ளைப் பகுதியையும் நீக்கி விட்டு, சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

கடலைப்பருப்பை நன்றாக வேக வைத்தெடுத்து வைத்துக் கொள்ளவும்.

பூசணிக்காய் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து, காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீரைச் சேர்த்து வேக விடவும். காய் நன்றாக வெந்தவுடன் கடலைப்பருப்பை அதில் சேர்த்துக் கிளறி விடவும்.

இதனிடையே, தேங்காய்துருவல், பச்சை மிளகாய் சீரகம், அரிசி ஆகியவற்றை ஒன்றாகப் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.

அரைத்த விழுதை பூசணிக்காயில் சேர்த்துக் கிளறி விட்டு கொதித்து வரும் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.

பின்னர் அதில் கடுகு, வெங்காயம் (பொடியாக நறுக்கிப் போடவும்), கறிவேப்பிலை தாளித்துக் கொட்டி இறக்கி வைக்கவும்.

சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். அல்லது தொட்டுக் கொண்டு சாப்பிடவும் செய்யலாம்.

2 கருத்துகள்:

வல்லிசிம்ஹன் சொன்னது…

saappida naan ready ma. thank you.

கமலா சொன்னது…

தங்கள் வருகைக்கு மிக்க நன்றி வல்லிசிம்ஹன் அவர்களே.

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...